கனமழை எதிரொலி: கேரளாவை ஒட்டியுள்ள பந்தலூர் பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு - நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்..!

மழை நீடித்தால் நாளை மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.



நீலகிரி: கேரளா மாநிலத்தையொட்டிய நீலகிரி மாவட்டத்தின் பந்தலூர் பகுதியில் நேற்று 8 செ. மீ மழையு‌ம் இன்று காலை 7 செ.மீ மழை பெய்துள்ளதையடுத்து அப்பகுதி 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

உதகையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அவர், மாவட்டத்தில் பெய்து வரும் மழை தொடர்பாக முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தியதாகவும், மழையினால் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்களுக்கு எந்த வகையிலும் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் ஆங்காங்கே மீட்புக் குழுக்களை தயாராக வைக்குமாறு கூறியதாக தெரிவித்தார்.

கூடலூர், பந்தலூர் பகுதியில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் 287 கி.மீ தூரத்திற்கு நீர் நிலைகள் தூரெடுக்கப்பட்டதன் விளைவாக வெள்ளநீரினால் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை என்றார்.

மேலும், தற்போது 456 வெள்ள பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், தாழ்வான நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் சூழல் ஏற்படவில்லை என்றும், மழை நீடித்தால் நாளை மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...