நவம்பர் 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் உட்பட 24-ரயில்கள் நேரம் மாற்றம்.!!

கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் சில ரயில்களின் நேரத்தை மாற்றம் ஏற்படுத்தி வருகிறது. அதன்படி சென்னை, எழும்பூர், கன்னியாகுமரி, கோவை மயிலாடுதுறை உட்பட 24-சிறப்பு ரயில்களில் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் சில ரயில்களின் நேரத்தை மாற்றம் ஏற்படுத்தி வருகிறது. அதன்படி சென்னை எழும்பூர் கன்னியாகுமரி கோவை மயிலாடுதுறை உட்பட 24-சிறப்பு ரயில்களில் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

கோவை மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு சிறப்புரையில் மயிலாடுதுறையை மதியம் 1.55 மணிக்கு சென்றடையும்.

நாகர்கோவில் விரைவு சிறப்புரையில் கொல்கத்தாவிற்கு மாலை 4.55-மணிக்கு சென்றடையும்.

சென்னை எழும்பூர் கொல்லம் விரைவு சிறப்பு ரயில் இரணியல் ரயில் நிலையத்தை 9:36- மணிக்கும். குழித்துறை ரயில் நிலையத்தைக் காலை 9.52-மணிக்கும், கொல்லத்திற்கு மதியம் 12.55-மணிக்கு சென்றடையும்.

சென்னை எழும்பூர் கன்னியாகுமரி விரைவு சிறப்பு ரயில் நாகர்கோவில் காலை 5- மணிக்கு சென்றடையும்.

கோவை நாகர்கோவில் விரைவு சிறப்பு ரயில் மதுரை சந்திப்பு அதிகாலை 12.25- மணிக்கும், விருதுநகர் சந்திப்பை அதிகாலை 1.13-மணிக்கும் அடையும்.

இந்த ரயில்களின் நேரம் மாற்றம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புவனேஸ்வர் ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் திருச்சிக்கு மாலை 4.5-மணிக்கும். புதுக்கோட்டைக்கு மாலை 5.3-மணிக்கும் மானாமதுரை 6.55-மணிக்கும், ராமநாதபுரத்தை இரவு 7.53-மணிக்கு சென்றடைகிறது.

மதுரை ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் மானாமதுரை சந்திப்பை 7:10-க்கும். ராமநாதபுரத்தை இரவு 8-மணிக்கும், பாம்பணை இரவு 9.9-மணிக்கும் வந்தடையும்.

இந்த ரயில்களின் நேரம் மாற்றம் அடுத்த மாதம் 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மொத்தம் 24-சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...