தமிழகத்தில் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர்கள் இடமாற்றம்

தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் தொடர்ந்து 3-ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் பணியாற்றி வந்த 38-மேற்பார்வைப் பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.


கோவை: தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் பணியாற்றி வந்த 38 மேற்பார்வைப் பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் பணியாற்றி வந்த 38 மேற்பார்வைப் பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதில், கோவை மின்வாரிய மாநகர் வட்ட மேற்பார்வைப் பொறியாளராக பணியாற்றி வந்த கே.குப்புராணி, கோவை தெற்கு வட்ட மேற்பார்வைப் பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை தெற்கு வட்ட மேற்பார்வைப் பொறியாளராகப் பணியாற்றிய ஸ்டாலின்பாபு, திருப்பூர் வட்ட மேற்பார்வைப் பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை வடக்கு வட்ட மேற்பார்வைப் பொறியாளராகப் பணியாற்றிய ஏ.தமிழ்ச்செல்வி, உடுமலை வட்ட மேற்பார்வைப் பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உடுமலை வட்ட மேற்பார்வைப் பொறியாளராக பணியாற்றிய எஸ்.விஸ்வநாதன், கோவை வடக்கு வட்ட மேற்பார்வைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் வட்ட மேற்பார்வைப் பொறியாளராக பணியாற்றிய ஜவஹர், திருவலம் வட்ட மேற்பார்வைப் பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பல்லடம் வட்ட மேற்பார்வைப் பொறியாளராக பணியாற்றிய சுப்ரமணி, திண்டுக்கல் வட்ட மேற்பார்வைப் பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை வட்ட மேற்பார்வைப் பொறியாளராக பணியாற்றிய சகாயராஜ், பல்லடம் வட்ட மேற்பார்வைப் பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோபி வட்ட மேற்பார்வைப் பொறியாளராக பணியாற்றிய நேரு, கள்ளக்குறிச்சி வட்ட மேற்பார்வைப் பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி வட்ட மேற்பார்வைப் பொறியாளராக பணியாற்றிய அருட்பெருஞ்ஜோதி கோபி வட்ட மேற்பார்வைப் பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...