கோவை மாநகராட்சியில் குடிநீர் இணைப்புகளுக்கு கூடுதல் வைப்புதொகை செலுத்த காலக்கெடு நீட்டிப்பு

கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக துணை விதிகளின் படி 01.10.2013 முதல் அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன் இருந்த 60 வார்டுகளில் 01.10.2013-க்கு முன்னர் வீட்டு உபயோக குடிநீர் இணைப்பு பெற்ற இணைப்புதாரர்கள் கூடுதல் வைப்புத் தொகையாக ரூ.4000 வீட்டு உபயோகமல்லாத முறை இணைப்புதாரர்கள் ரூ.7000 செலுத்தப்பட வேண்டும்.

இதற்கான அறிவிப்பு அனைத்து இணைப்புதாரர்களுக்கும் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டு 15.09.2017-க்கு முன்னர் கூடுதல் வைப்புத்தொகை செலுத்துமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், 01.10.2013-க்கு முன்னர் குடிநீர் இணைப்பு பெற்று அறிவிப்பு கிடைக்கப் பெறாத இணைப்புதாரர்கள் சம்மந்தப்பட்ட வரிவசூல் மையங்களுக்கு குடிநீர் கணக்கெடுப்பு புத்தகத்தைக் கொண்டு சென்று குடிநீர் இணைப்பு எண்ணின் அடிப்படையில் இத்தொகையினை செலுத்திக் கொள்ளலாம்.

எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, கூடுதல் வைப்பு தொகையினை தவறாமல் செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...