கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்லூரியில் அக்.14-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு அரசு ஆணைகினங்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14.10.2017 அன்று கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்லூரியில் நடைபெற உள்ளது.  இது தொடர்பான மாவட்ட அளவிலான அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நேற்று செப்.,27) மாவட்ட ஆட்சியர் அலுவலர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், பொள்ளாட்சி சார்ஆட்சியர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு இம்முகாம் சிறப்பாக நடைபெறவும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தனர். இம்முகாம் சிறப்பாக நடைபெற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து இம்முகாமில் அதிக அளவில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆலோசனை வழங்கினார். 

இக்கூட்டத்தில் கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்லூரி நிர்வாக அலுவலர்கள், தீயணைப்புத்துறை, காவல்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதார துறை, தொழிற்சாலைகள், பாதுகாப்புத்துறை போன்ற அனைத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...