நீலகிரி மலைரயில் சேவையை மேம்படுத்தும் விதமாக டிச.,08 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் : நீலகிரி மாவட்ட மலைரயில் சேவையின் மூலம் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக சிறப்பு ரயில்களை டிசம்பர் 8-ம் தேதி முதல் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.


சேலம் : நீலகிரி மாவட்ட மலைரயில் சேவையின் மூலம் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக சிறப்பு ரயில்களை டிசம்பர் 8-ம் தேதி முதல் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- டிசம்பர் 8-ம் தேதி முதல் வரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு ப்ரீமியம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. காலை 09.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், கல்லாறில் 09.28 மணி முதல் 09.35 மணி வரையிலும், ஹில்குரோவில் 10.46 மணி முதல் 11 மணி வரையிலும் நிறுத்தி வைக்கப்படுகிறது. பின்னர், 12.30 மணியளவில் குன்னூரை சென்றடைகிறது. 

இதேபோல, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி இந்த ரயில் இயக்கப்படுகிறது. குன்னூரில் பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் ப்ரீமியம் சிறப்பு ரயில், ஹில்குரோவில் பிற்பகல் 02.34 மணி முதல் 02.42 மணி வரையிலும், கல்லாறில் 03.50 மணி முதல் 03.55 மணி வரையிலும் நிறுத்தி வைக்கப்படும். பின்னர், மாலை 04.20 மணியளவில் மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. 

இந்த ரயிலில், 132 இருக்கைகள் உள்ளன. அதாவது, முதல் வகுப்பில் 16 இருக்கைகள், 2-ம் வகுப்பில் 36 இருக்கைகள் என ஒரு பெட்டியும், 96 இருக்கைகள் அடங்கிய மற்றொரு பெட்டியும் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிறப்பு ரயில்சேவையின் பயணக் கட்டணமாக முதல் வகுப்பிற்கு ரூ. 1,100-ம், 2-ம் வகுப்பிற்கு ரூ. 800-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணக்கட்டணத்தில், 200 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்படும். 

இதேபோல, வரும் டிசம்பர் 09-ம் தேதி முதல் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உதகையில் இருந்து கேத்திக்கு ரவுண்ட் டிரிப் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. உதகையில் இருந்து மதியம் 02.30 மணியளவில் புறப்படும் இந்த ரயில், கேத்திக்கு 3 மணிக்கு சென்றடைகிறது. அங்கு இயற்கையின் அழகை சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் விதமாக சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து 03.30 மணிக்கு புறப்பட்டு, 4 மணியளவில் உதகையை சென்றடைகிறது. 

இந்த ரயிலில், 82 இருக்கைகள் உள்ளன. அதாவது, முதல் வகுப்பில் 16 இருக்கைகள், 2-ம் வகுப்பில் 36 இருக்கைகள் என ஒரு பெட்டியும், 30 இருக்கைகள் அடங்கிய மற்றொரு பெட்டியும் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிறப்பு ரயில்சேவையின் பயணக் கட்டணமாக முதல் வகுப்பிற்கு ரூ. 400-ம், 2-ம் வகுப்பிற்கு ரூ. 300-ம் வசூலிக்கப்படுகிறது. பயணக்கட்டணத்தில், 100 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...