கோவை மத்திய சிறையின் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜுலை 6-ம் தேதி கடைசி நாள்

கோவை : கோவை மத்திய சிறையில் உள்ள சமையலர், நாவிதர் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஜுலை 6-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை மத்திய சிறையில் உள்ள சமையலர், நாவிதர் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஜுலை 6-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு சிப்ப எழுத்தர், ஒரு நாவிதர், இரண்டு சமையலர், ஒரு லாரி ஓட்டுநர், இரண்டு நெசவுப் பணியாளர், ஒரு பாய்லர் பயர்மேன், சிங்காநல்லூர் வெளிச்சிறையில் உள்ள ஒரு சமையலர், கட்டுப்பாட்டு கிளைச்சிறைகளில் காலியாக உள்ள 9 துப்புரவு பணியாளர் மற்றும் 10 சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த ஆண் நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை (மொபைல் எண் குறிப்பிட்டு) சம்பந்தப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு முகவரியிட்டு வரும் ஜுலை 6-ம் தேதிக்குள் கோவை மத்திய சிறையில் கிடைக்கும் வண்ணம் அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பதவிகளை நிரப்புவதற்கான நேர்காணல் தேதி மற்றும் நேர விபரம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் பின்னர் தெரிவிக்கப்படும். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...