பி.சி., எம்.பி.சி., கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற அக்., 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை : பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும்‌ சீர்மரபினர்‌ (பி.சி., எம்‌.பி.சி., டி.என்‌.சி.) மாணவ / மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற அக்டோபர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


கோவை : பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும்‌ சீர்மரபினர்‌ (பி.சி., எம்‌.பி.சி., டி.என்‌.சி.) மாணவ / மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற அக்டோபர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- அரசு, அரசு உதவி பெறும்‌ கல்வி நிறுவனங்கள்‌ மற்றும்‌ தனியார்‌ தொழிற்கல்லூரிகளில்‌ அரசு ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ பயிலும்‌ பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும்‌ சீர்மரபினர்‌ (பி.சி., எம்‌.பி.சி., டி.என்‌.சி.) மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின்‌ கீழ்‌ கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ இளங்கலை பட்டப்படிப்பு பயிலும்‌ மாணவ / மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுநிலை, பாலிடெக்னிக்‌, தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம்‌ ரூ. 2,00,000-க்கு மிகாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

உதவித்தொகைக்கான கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும்‌ விண்ணப்ப படிவங்களை அவர்கள்‌ பயிலும்‌ கல்வி நிறுவனங்களிலேயே பெற்று அக்டோபர் 15-ம் தேதிக்குள்‌ பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன்‌ கல்வி நிலையங்களில்‌ சமர்பிக்க வேண்டும்‌. மாணவர்கள்‌ தங்களின்‌ வங்கி கணக்கு எண்‌ விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்‌. செப்டம்பர் 01-ம் தேதி முதல் துவங்கும்‌ கல்வி உதவித்தொகை இணையதளத்தில்‌ புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 25-ம் தேதிக்கு முன்பும்‌ புதியதிற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30-ம் தேதிக்கு முன்பும்‌ அந்தந்த கல்வி நிறுவனங்கள்‌ இணையதளம்‌ மூலம்‌ சமர்பிக்க வேண்டும்‌.

மேலும்‌ விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகவும்‌. அரசு இணையதளம் www.tn.gov.in/ bcmbcdept-‌யிலும்‌ இத்திட்டங்கள்‌ குறித்து விவரங்கள்‌ மற்றும்‌ விண்ணப்பப் படிவங்கள்‌ உள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...