பொள்ளாச்சியில் நேற்று 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொள்ளாச்சியில் நேற்று 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொள்ளாச்சியில் நேற்று 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெருமளவில் கொரோனா அதிகரித்து வந்த நிலையில், கடந்த இரு நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதித்து வந்த நிலையில், கடந்த இரு நாட்களாக இந்த பாதிப்பு குறைந்துள்ளது.

நேற்று பொள்ளாச்சி நகர் பகுதியில் 37 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 23 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 28 பேருக்கும் என்று ஒரே நாளில் 88 பேர்களுக்கு கொரோனா பெருந்தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நோய்த்தொற்று ஏற்பட்ட பகுதிகளில் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...