கிணத்துக்கடவில் நேற்று 30 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி..!

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோவையில், நாளுக்கு நாள் கொரோன பெருந்தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில், நேற்று கிணத்துக்கடவு பகுதியில் ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் கிணத்துக்கடவு பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும், கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால், நேற்று கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தடுப்பூசி யாருக்கும் போடவில்லை. சூலக்கல், பணப்பட்டி பகுதியில் நடந்த காய்ச்சல் பரிசோதனை முகாமில் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அறிகுறிகள் இல்லாததால் கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்று சுகாதாரதுறை வட்டாரத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...