சுகாதாரத்துறையின் தொடர் முயற்சியால் பொள்ளாச்சி பகுதியில் குறைந்துவரும் கொரானா தொற்று..!

பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வந்த நிலையில் தற்போது, பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பெருந்தொற்று குறைந்துவருகிறது. இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வந்த நிலையில் தற்போது, பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பெருந்தொற்று குறைந்துவருகிறது. இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. பொள்ளாச்சி பகுதியைப் பொறுத்தவரை தினமும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இன்று நகரத்தில் 21 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 18 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 17 பேருக்கும் என மொத்தம் 56 பேருக்கு கொரோனா பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பாதிப்பு குறைந்துள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...