பொள்ளாச்சியை அடுத்து, கிணத்துக்கடவிலும் கொரோனா தொற்று பாதியாக குறைந்தது

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது.

இதனால் கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டாரத்தில் நாளொன்றுக்கு 60 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்து வருவதால் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது

கிணத்துக்கடவு பகுதியில் இன்று 26 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பை உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தகவல்

தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு குறையத் தொடங்கியதால் மக்கள் மத்தியில் நிம்மதியை நிலவி வருகிறது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...