பொள்ளாச்சியில் இன்று 81 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி... 60 வயது முதியவர் உயிரிழப்பு..!

பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் இன்று 81 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் இன்று 81 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. பொள்ளாச்சி பகுதியைப் பொறுத்தவரை தினமும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று நகரத்தில் 22 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 36 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 24 பேருக்கும் என ஒரே நாளில் மொத்தம் 81 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி மீன்கரை சாலையைச் சேர்ந்த 60 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...