பொள்ளாச்சியில் இன்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பொள்ளாச்சி: கடந்த வாரத்தை ஒப்பிட்டு பார்க்கையில், பொள்ளாச்சியில் கொரானா தொற்று குறைந்து வருவது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


பொள்ளாச்சி: கடந்த வாரத்தை ஒப்பிட்டு பார்க்கையில், பொள்ளாச்சியில் கொரானா தொற்று குறைந்து வருவது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 40 என்றும் அதில் நகர் பகுதியில் 7 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 22 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 11 பேருக்கும் என மொத்தம் இன்று 40 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கிற்கு முன்பு நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 பேர் வரை கொரோனா தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது 50-க்கும் கீழ் நோய் தொற்று கணிசமாக குறைந்துள்ளது. மேலும், தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நோய்த் தொற்று ஏற்பட்ட இடங்களை சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...