சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று!

கோவை: சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சந்திராபுரத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுல்தான்பேட்டை, வாரப்பட்டி, வதம்பச்சேரி, செஞ்சேரிமாலை, செஞ்சேரி புத்தூர், இடையர்பாளையம் போன்ற சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது. கொரோனா நோய் தொற்று பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

இங்கு மருத்துவர்கள் செவிலியர் உதவியாளர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த வாரம் இரு செவிலியர்களுக்கு கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டன. எனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேலும் இரு செவிலியர்களுக்கும் ஒரு அலுவலக உதவியாளருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஏற்படவே சுகாதாரத்துறை சார்பில் ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இங்கு வந்த பொதுமக்கள் வதம்பச்சேரி பகுதியில் உள்ள சுகாதார நிலையத்திற்கு சென்று தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்யும்படி சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...