பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் 32-பேருக்கு கொரோனா தொற்று!

கோவை: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் இன்று 32-பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் இன்று 32-பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா 2-ம் அலை தொடங்கியது முதல், நோய் பரவல் அதிகரித்துக் காணப்பட்டது. சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே நோய்த்தொற்று எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், தற்போது நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மீண்டும் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது.

பொள்ளாச்சி நகரில் இன்று 9-பேருக்கும் வடக்கு ஒன்றியத்தில் 5-பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 7-பேருக்கும், ஆனைமலையில் 11-பேருக்கும் எனப் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 32-பேருக்கு நோய்த் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...