மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்யக் கெடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை நாளை (பிப்.,9) நண்பகல் 12 மணிக்குள் அகற்ற வேண்டும் என, உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை நாளை (பிப்.,9) நண்பகல் 12 மணிக்குள் அகற்ற வேண்டும் என, உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களுக்கு கீழ், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் 115 கடைகள் செயல்பட்டன. ஆயிரங்கால் மண்டபம் அருகே வீர வசந்தராய மண்டபம் பகுதியில் மட்டும் 86 கடைகள் இருந்தன. இங்கு கடை எண், 75, 76-ல் ஏற்பட்ட தீ விபத்தால், வீர வசந்தராய மண்டபம் இடிந்து விழுந்தது. பயங்கர தீ விபத்துக்கு காரணமான கடைகளை அகற்றக்கோரி, பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடைகளை அகற்ற கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து வியாபாரிகள் சங்கத்தினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மீனாட்சி கோயில் வளாகத்தில் செயல்படும் 115 கடைகளை நாளை (பிப்.,9) நண்பகல் 12 மணிக்குள் அகற்ற வேண்டும். உரிமையாளர்கள், தங்களது பொருட்களை கோயில் நிர்வாகம் குறிப்பிடும் இடத்தில் வைக்க வேண்டும். அதனையும், 3 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...