மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போனுக்கு தடை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

மீனாட்சி கோயிலில் தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். மீனாட்சி கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், தீவிபத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மீனாட்சி கோயிலுக்குள் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் தவிர பார்வையாளர்கள், பக்தர்கள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது. கோயிலுக்கு மத்தியப் படை பாதுகாப்பு அளிப்பது குறித்து மத்திய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த வேண்டும். நவீனரக தீ தடுப்பு சாதனங்களை அமைக்க வேண்டும். இதனைக் கையாள்வது குறித்து ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். மீனாட்சி கோயிலில் இருந்து 1 கி.மீ., சுற்றளவுகளில் 9 மீட்டர் மேல் உயரமுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும்.

மேலும், கோயிலில் அதிக அளவில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் முழு மின் இணைப்பையும் ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறியதுடன், இது குறித்து பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...