ஜெயலலிதா மரண விவகாரம்: இளவரசியின் மகன் விவேக்கிற்கு சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயா டிவியை நிர்வகித்து வரும் இளவரசியின் மகன் விவேக்கிற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயா டிவியை நிர்வகித்து வரும் இளவரசியின் மகன் விவேக்கிற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்தனர். பின்னர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் என பலரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இளவரசியின் மகனான விவேக் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 13ஆம் தேதி விவேக் ஆஜராக வேண்டும் என விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம் வரும் 12-ஆம் தேதி முதல் மீண்டும் விசாரணையைத் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அடுத்தவாரம் 4 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் ஜெயலலிதாவுடன் நீண்ட நாட்கள் இருந்தவர் என்பதால் அவரிடம் விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. வரும் 12-ம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பனிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துகிறது. அப்பல்லோ மருத்துவர் பாலாஜியை வரும் 14-ம் தேதியும், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனை 15-ம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...