தீபா வீட்டிற்கு வந்த டுபாக்கூர் வருமான வரித்துறை அதிகாரி தப்பியோட்டம்

ஜெ.தீபா வீட்டிற்கு வந்த போலி வருமான வரித்துறை அதிகாரி சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.தீபா வீட்டிற்கு வந்த போலி வருமான வரித்துறை அதிகாரி சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் குதித்த அவர் எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவை என்ற பேரவையை தொடங்கினார். தனது பேரவையில் பதவி கொடுப்பதாக கூறி பலரிடம் பலகோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக தீபா மற்றும் அவரது டிரைவர் ராஜா மீது போலீஸில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், இன்று காலை சென்னை தியாகராயர் நகரில் உள்ள தீபா வீட்டிற்குத் தன்னை வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ்குமார் என்று கூறிக்கொண்டு ஒரு நபர் வந்தார். அவர் கையில் வாரண்டு மற்றும் ஐடி ஆகியவை வைத்திருந்ததாகத் தெரிகிறது. 

அவர் மீது தீபா வீட்டில் இருந்தவர்களுக்குச் சந்தேகம் ஏற்படவே போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், வருமான வரித்துறை என்று கூறி வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து தப்பியோடினார். 

காவல் துறை அதிகாரிகள் அவரை துரத்திச் சென்றனர். ஆனால், அதற்குள் அருகில் இருந்த வணிக வளாக கட்டிடத்திற்குள் புகுந்த அந்த நபர் மாயமானார். தற்போது அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...