பிப்.,12-ம் தேதி முதல் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்

டேங்கர் லாரி உரிமையாளர்கள் 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

டேங்கர் லாரி உரிமையாளர்கள் 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் முறையில் மத்திய அரசு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை மண்டல வாரியாக டெண்டர் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தந்த மாநிலங்களில் புதியதாக டெண்டர் நடத்தப்படும் என்றும், அதில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டெண்டர் தொடர்பான புதிய அறிவிப்பைத் திரும்ப பெறாவிட்டால் வேலைநிறுத்தம் செய்யப்படும் எனவும் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில், மத்திய அரசின் புதிய டெண்டர் முறையைக் கைவிட வேண்டும், கடந்த காலங்களில் நடைபெற்றது போலவே டெண்டர் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி, டேங்கர் லாரிகளின் போராட்டம் நடைபெற்றால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...