ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டிய இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.

சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் புகழாரம் சூட்டினர்.

சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் புகழாரம் சூட்டினர். 

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் இன்று கலந்துகொண்டு பேசிய அவர், தமிழ்நாட்டை ஜெயலலிதா என்கிற தெய்வம் எங்களை வழிநடத்தி ஆட்சி செய்கின்றது. உலகத்தையே உற்று கவனிக்க வைத்தவர். வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவையில் வரலாறு படைத்தவர் ஜெயலலிதா. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால்தான் தமிழக மக்கள் வளர்ந்தார்கள். வளர்ச்சித் திட்டங்கள், நலத்திட்டங்களை தந்துவிட்டு சென்றிருக்கிறார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சி என்பது அக்னியில் இருந்து மீண்ட பீனிக்ஸ் பறவை போன்றது. பல சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து 6 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். பூமி உள்ளவரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழ் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

இவரைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரிந்து சரித்திரம் படைத்தவர் ஜெயலலிதா. தமிழக மக்களின் நலனுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. காவிரி நீரை பெற்றுதர பாடுபட்டவர். சட்டப்பேரவையில் தனி ஒருவராக வந்து சிங்கம் போல் கர்ஜித்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா இறப்பு செய்தியை கேட்டு கடலில் துடுப்பு இல்லாத படகு போல் தத்தளித்தோம். என்றார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...