தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கண்டு கண்ணீர் வடித்த வானம்!

தமிழகத்தில் 6வது நாளாக தொடரும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு தொடர் போராட்டதில் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில்  கனமழை பெய்தது. எனினும் போராட்டக்காரர்கள் மழையினை பொருட்படுத்தாமல் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை வஉசி மைதானத்தில் நேற்று விடிய விடிய கொட்டிய மழையிலும் தங்களது போராட்டத்தை கைவிடாமல் நடத்தி வருகின்றனர்.



சனிக்கிழமை நாளான நேற்று பள்ளிகள் விடுமுறை என்பதால் கோவை வஉசி மைதானத்தில் குழந்தைகளுடன் குவிந்த பெற்றோர்கள். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டத்தில் இன்று பெண்களின் கூட்டம் அலைமோதியது. போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகையில் இரவில் தீடீர் மழை குறுக்கிட்டதால், மழையினையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலர் போராட்டத்தை கைவிடாமல் கோஷங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தினர்.



மழையில் பொதுமக்கள் போராடுவதை கண்டு தன்னார்வலர்கள் பலர் குடைகள் மற்றும் தார்பாய்கள் கொடுத்து உதவினர். கடும் பனியிலும், மழையிலும் போராட்டத்தை கைவிடாமல் நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் பெய்த திடீர் மழையின் காரணமாக இளைஞர்கள் பலர் அவிநாசி சாலையில் உள்ள சாலை ஓரங்களில் படுத்தும் வருகின்றனர்.



மேலும், நேற்று மாலை தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஆளுநர் முயற்சியில் ஜல்லிகட்டிற்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை அடுத்து இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பின் இந்த அவசர சட்டம் நிரந்தரம் அல்ல என்றும் தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்க்கு நிரந்தர சட்டம் வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தமிழக முழுவதும் உள்ள போராட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.



Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...