வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.


கோவை: பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாப்பநாயக்கன்பாளையம் பழையூர், புதிய சிற்றம்பலம் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் (43).கடந்த ஜூலை 1-ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரவிசங்கர், வழக்கம்போல் ஸ்கூட்டரை வீட்டின் முன்பக்க வாசலில் நிறுத்தி பூட்டிவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மறுநாள் காலை சுமார் 6 மணியளவில் எழுந்து வெளியே வந்த ரவிசங்கர், ஸ்கூட்டர் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்திலும், தெரிந்த இடங்களிலும் தேடியும் வாகனம் கிடைக்காததால், சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஸ்கூட்டரை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...