கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
கோவை: பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பநாயக்கன்பாளையம் பழையூர், புதிய சிற்றம்பலம் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் (43).கடந்த ஜூலை 1-ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரவிசங்கர், வழக்கம்போல் ஸ்கூட்டரை வீட்டின் முன்பக்க வாசலில் நிறுத்தி பூட்டிவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மறுநாள் காலை சுமார் 6 மணியளவில் எழுந்து வெளியே வந்த ரவிசங்கர், ஸ்கூட்டர் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்திலும், தெரிந்த இடங்களிலும் தேடியும் வாகனம் கிடைக்காததால், சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஸ்கூட்டரை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
பாப்பநாயக்கன்பாளையம் பழையூர், புதிய சிற்றம்பலம் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் (43).கடந்த ஜூலை 1-ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரவிசங்கர், வழக்கம்போல் ஸ்கூட்டரை வீட்டின் முன்பக்க வாசலில் நிறுத்தி பூட்டிவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மறுநாள் காலை சுமார் 6 மணியளவில் எழுந்து வெளியே வந்த ரவிசங்கர், ஸ்கூட்டர் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்திலும், தெரிந்த இடங்களிலும் தேடியும் வாகனம் கிடைக்காததால், சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஸ்கூட்டரை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.