மாணவர் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும்- அன்புமணி இராமதாஸ்


மாணவர் போராட்டத்தில் கலவரம் நடந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும், அதற்காக பா.ம.க நீதிமன்றம் செல்லும் எனவும் அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க மாநில இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாரதியார் பல்கலைகழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு வருகை தந்தார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார். 

தமிழ்நாடு முழுவதும் அமைதியாக நடந்த மாணவர் போராட்டத்திற்கு கலங்கம் ஏற்படுத்த காவல் துறையினர் திட்டமிட்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருப்பதாகவும், சென்னையில் நடந்த கலவரத்திற்கு காவல் துறை தான் காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார். 

மேலும், ஆளும் கட்சிக்குள் உள்ள பிரச்சனைகளை மறைக்க இந்த தாக்குதல் நடந்து இருக்கலாம் எனவும், காவல் துறையினரே ஆட்டோ, குடிசை, வாகனங்களை கொளுத்தும் காட்சிகள் வெளியாகி இருப்பதாகவும், சமூக விரோதிகள் கலவரத்தை தூண்டி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் அல்லது சி.பி.ஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியாகும் எனவும் கூறிய அவர், அதற்காக பா.ம.க நீதிமன்றம் செல்லும் என தெரிவித்தார். 

கோவையை பொருத்த வரை அத்திக்கடவு- அவிநாசி, பண்டியாறு- புன்னம்புழா மற்றும் அட்டப்பாடியில் கேரள அரசு அணைக்கட்டுதல் ஆகிய 3 பிரச்சனைகள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டியது அவசியம் என தெரிவித்தார். 

மத்திய பா.ஜ.க அரசு அடுத்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடக அரசிற்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். 

பவானி ஆற்றில் கேரள அரசு அணைக்கட்டுதல், காவிரி  பிரச்சனை உள்ளிட்ட நதிநீர் பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சி கூட்டங்களை கூட்டி, பிரதமரை சந்தித்து அழுத்தம் தந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...