ஜல்லிக்கட்டுக்கான மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பியது இடதுசாரிகளும் சில தீயசக்திகளும்தான் என பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் தகவல்


ஜல்லிக்கட்டுக்கான மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பியது இடதுசாரிகளும் சில தீயசக்திகளும்தான் என கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சந்தோஷமாக வீடு திரும்பியுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமர் சிறப்பாக செயல்பட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வுகண்டுள்ளார் எனவும் பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். 

பாராளுமன்றத்தில் திருக்குறளை ஒலிக்கச்செய்ததும், இந்தியாவெங்கும் திருக்குறளின் பெருமையை மக்களிடம் கொண்டு சேர்ந்ததும் மத்திய அரசு நடவடிக்கைதான் என கூறினார். 

தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்றிருப்பது மாணவர்களையே சாரும் எனவும், ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பாரம்பரியம் அல்ல அது இந்தியாவின் பாரம்பரியம் எனவும் தேசிய விழாவாக கொண்டாடப்படும் எனத் தெரிவித்தார்.

மாணவர்களின் போராட்டத்தின் போது சில தீய சக்திகள் மற்றும் இடதுசாரிகள் இந்த போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட்டதாகவும், அதையும் தாண்டி மாணவர்களின் ஒற்றுமையால்தான் போராட்டம் வெற்றி பெற்றிருப்பதாக கூறினார். 

காந்திய வழியில் ஈடுபட்ட மாணவர்கள் தேசியகீதம் பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது வருந்தத்தக்கதாகவும், மாணவர்கள் நமது குடும்பத்தில் ஒருவர், அவர்கள் பிரச்சனையின் போது நான் அங்கு இருந்திருந்தால் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் அமர்ந்திருப்பேன் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த போராட்டம் குறித்து அரசியல்வாதிகள் பொதுமக்களிடம் தெளிவாக தெரிவித்து, மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்ப முயன்றவர்களை உடனே அப்புறப்படுத்தியிருக்க வேண்டும் என்றார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...