ஜல்லிக்கட்டுக்கான மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பியது இடதுசாரிகளும் சில தீயசக்திகளும்தான் என பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் தகவல்


ஜல்லிக்கட்டுக்கான மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பியது இடதுசாரிகளும் சில தீயசக்திகளும்தான் என கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சந்தோஷமாக வீடு திரும்பியுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமர் சிறப்பாக செயல்பட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வுகண்டுள்ளார் எனவும் பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். 

பாராளுமன்றத்தில் திருக்குறளை ஒலிக்கச்செய்ததும், இந்தியாவெங்கும் திருக்குறளின் பெருமையை மக்களிடம் கொண்டு சேர்ந்ததும் மத்திய அரசு நடவடிக்கைதான் என கூறினார். 

தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்றிருப்பது மாணவர்களையே சாரும் எனவும், ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பாரம்பரியம் அல்ல அது இந்தியாவின் பாரம்பரியம் எனவும் தேசிய விழாவாக கொண்டாடப்படும் எனத் தெரிவித்தார்.

மாணவர்களின் போராட்டத்தின் போது சில தீய சக்திகள் மற்றும் இடதுசாரிகள் இந்த போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட்டதாகவும், அதையும் தாண்டி மாணவர்களின் ஒற்றுமையால்தான் போராட்டம் வெற்றி பெற்றிருப்பதாக கூறினார். 

காந்திய வழியில் ஈடுபட்ட மாணவர்கள் தேசியகீதம் பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது வருந்தத்தக்கதாகவும், மாணவர்கள் நமது குடும்பத்தில் ஒருவர், அவர்கள் பிரச்சனையின் போது நான் அங்கு இருந்திருந்தால் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் அமர்ந்திருப்பேன் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த போராட்டம் குறித்து அரசியல்வாதிகள் பொதுமக்களிடம் தெளிவாக தெரிவித்து, மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்ப முயன்றவர்களை உடனே அப்புறப்படுத்தியிருக்க வேண்டும் என்றார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...