மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்


தமிழகம் முழுவதும் நேற்று ஜல்லிக்கட்டு விவகார போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதில், மாணவர்களின் அறப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர்களையும் காவல்துறையினர் தாக்கினர்.

இந்த தாக்குதலால், பல மாணவர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சில இளைஞர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது. 

இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் மீதும், பெண்கள், வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தாக்குதல் நடத்திய காவல்துறையினரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...