மர்ம காய்ச்சலுக்கு 2 வயது பெண் குழந்தை பலி


கோவை செட்டிபாளையத்தை அடுத்த பெரியகுயிலி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு தீக்‌ஷா என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தீக்‌ஷாவுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து, அவரது பெற்றோர் தீக்‌ஷாவை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய தீக்‌ஷா இன்று காலை பேச்சு மூச்சின்றி காணப்பட்டார். 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.  அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீக்‌ஷா மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், தீக்‌ஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த செட்டிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...