கோவை விழாவின் ஒரு பகுதியாக 'மண்டலா' வகை ஓவியங்களின் கண்காட்சி துவக்கம்

கோவை ஜென்னி க்ளப்பில் செயல்பட்டு வரும் ஆர்ட் ஹவுஸ் கேலரி 'மண்டலா' வகை ஓவியங்களின் கண்காட்சியினை கோவை விழாவின் ஒரு பகுதியாக இன்று (27, ஜனவரி, 2017) நடத்தியது. 

இதனை ஜிஆர்டி சிபிஎப் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் சித்ரா வித்யபிரகாஷ் மற்றும் 136.1 யோகா மற்றும் நல்வாழ்வு மையத்தின் முதன்மை செயல் அதிகாரி வி.செந்தில் குமார் ஆகியோர் இணைந்து இக்கண்காட்சியினை துவக்கி வைத்தனர். 

இந்தக் கண்காட்சி இன்று முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை காலை 11 மணிமுதல் மாலை 7 மணி வரை ஆர்ட் ஹவுஸ் கேலரியில் நடைபெறவுள்ளது.

இந்த மண்டலா ஓவியங்கள் என்பது மிகவும் சிக்கலான வடிவங்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஓவியங்கள் ஆகும். பொதுவாக இது வட்ட வடிவில் இருக்கும். மண்டலா என்னும் வார்த்தை சமஸ்கிருதத்தில் வட்டத்தை குறிக்கும் வார்த்தை ஆகும். மண்டலா ஓவியங்களில் ஒரு கண்டுகொள்ளக் கூடிய மையப்புள்ளி இருக்கும். இதில் இருந்து பல வடிவங்களும், குறியீடுகளும், உருவாக்கப்பட்டு இருக்கும். 



இதில், கோவையைச் சேர்ந்த பல மண்டலா ஓவியர்களின் ஓவியங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 

136.1 யோகா மற்றும் நல்வாழ்வு மையத்தின் முதன்மை செயல் அதிகாரி வி.செந்தில் குமார் இதுகுறித்து கூறுகையில், 'மண்டலா ஓவியம் என்பது புத்தபிச்சுக்களால் நேபாலத்தில் மத சம்பிரதாயத்தில் ஒரு முக்கிய அம்சமாக விலங்குகிறது. இது நேபாலத்தின் பாரம்பரிய கலையாகும். 

இது மற்ற கலைகளில் இருந்து மிகவும் மாறுபட்ட கலைவடிவமாகும். இதை உருவாக்குவோரின் முழு ஈடுபாடும் இந்த ஓவியத்தை உருவாக்குவதில் மட்டுமே இருக்க வேண்டும். இது ஒருவகையான தியானம் என்றும் கூறப்படுகிறது.

இது யோகாவின் ஒரு பகுதியென்றும் கூறலாம். யோகாவில் மண்டலாவை அடிப்படையாகக் கொண்ட ஆசனங்கள் இருக்கிறது. இக்கலையானது கோவைக்கு ஒரு புதிய முயற்சியாகும். இதனை கோவை விழாவின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்கிறோம்'.

திருநங்கையான கல்கி சுப்ரமணியம் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த அவரது தோழர்களுடன் இக்கண்காட்சியினை காண வந்திருந்தார். அப்போது நமது நிருபருக்கு அவர் அளித்த பேட்டியில், 'மண்டலா என்பது வேதிக் ஜியோமெட்ரிக் மற்றும் கணக்குகளைக் கொண்டு உருவாக்கப்படும் ஒரு ஓவியம் ஆகும். பொதுவாக உலகத்தில் உள்ள அனைத்தும் ஏதோ ஒரு கணக்கில் தான் உருவாக்கப்பட்டுள்ளது என கூறுவார்கள். இந்த கலை வடிவம் நமது வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறது.

அனைவராலும் இந்த மண்டலா கலையானது ஏதோ ஒரு வடிவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கு ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒவ்வொரு பெயர் மூலம் அறியப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை நாம் இடும் கோலம் மண்டலாவின் ஒரு வகையே ஆகும்" என்றார்.

இந்த விழாவில் கோவை விழாவின் தலைவர், பிரவீன் குமார் மற்றும் யெங் இந்தியாவின் உபதலைவர், பிரசன்னகுமார் ஆகியோர் பங்கேற்றனர். 

கோவை விழாவின் ஒரு பகுதியாக வரும் ஜனவரி 30ம் தேதியன்று அனிமேஷன், மீடியா ஆர்ட்ஸ் உள்ளிட்டவற்றில் வேலைவாய்ப்புகள் குறித்து திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எம்.வெங்கடேசன் நடத்தும் ஒரு கருத்தரங்கும் நடைப்பெறவுள்ளது. 

ஜனவரி 31ம் தேதியன்று மண்டலா நமஷ்காரம் மற்றும் திபெத் பாடும் தியானம் ஆகியவை 136.1 யோகா மற்றும் நல்வாழ்வு மையத்தினரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட உள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...