பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்கக் கோரி மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு


பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பவானியை காப்போம் என்ற அமைப்பினை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பின்னர் பேட்டியளித்த அந்த அமைப்பின் நிர்வாகிகள், மேட்டுப்பாளையம் பகுதியில் ஓடும் பவானி ஆற்றில் மின்சாரத்திற்காக கூமபாளையம், சமயபுரம் ஆகிய இடங்களில் கதவணை கட்டப்பட்டு இருப்பதை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், பவானி ஆற்றில் சாக்கடை கழிவுகள், ஆலை கழிவுகள் கலப்பதால் ஆற்று நீரை பயன்படுத்தும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது எனவும், கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து, கேரளாவில் தேக்குவட்டை உள்ளிட்ட இடங்களில் தடுப்பணை கட்டப்படுவதால் பவானி ஆற்றில் தண்ணீர் வருவது முற்றிலும் தடைபட்டு போகும் எனவும், எனவே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...