கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ விக்னேஷ், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்றால் பொதுமக்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை:

அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழக (தவெக) வேட்பாளர் விக்னேஷ் அபார வெற்றி பெற்று அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.



இந்நிலையில், கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்த விக்னேஷுக்கு தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் வகையில் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ், கிணத்துக்கடவு தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என உறுதியளித்தார். சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட தனிப்பட்ட செலவுகளுக்காக பயன்படுத்த மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், கோவை மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியும் தனித்துவம் கொண்டது போல, கிணத்துக்கடவையும் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட முன்னேற்றமான தொகுதியாக மாற்றுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்பாக, மது மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாட்டை முழுமையாக ஒழிப்பதே தனது இலட்சியம் என கூறிய அவர், கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றால், பொதுமக்களை திரட்டி காவல் நிலையத்தை முற்றுகையிடுவேன் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், நீண்டகாலமாக சர்ச்சையாக இருந்து வரும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்சினைக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் தெரிவித்தார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...