இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்.


கோவை: இந்தியா முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியை முதன்மையான மொழியாக்க முயன்றுள்ள மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்ப்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது பேசிய மாணவர் சங்கத்தினர் இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியை முதன்மை மொழியாக ஆக்கியுள்ளனர். இதனால் பிற மாநில மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் உள்ளது.

அனைத்து மொழியையும் ஒரே சமமாக பார்க்க வேண்டும். இன்று தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்பிற்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை இந்திய மாணவர் சங்கத்தினர் வரவேற்கிறோம், அதே போல உயர் கல்வி நிலையங்களில் இந்தி கட்டாயத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...