கேஎம்சிஎச் மருத்துவமனையின் சார்பில் உலக புற்றுநோய் தினம் அனுசரிப்பு


உலகம் முழுவதும் பிப்ரவரி 4ம் தேதியன்று யூனியன் ஆப் இன்டர்நேசனல் கேன்சர் கன்ரோல் என்ற அமைப்பினால் உலக புற்றுநோய் தினம் அனசரிக்கப்படுகிறது.

இதைமுன்னிட்டு கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையில் கையெழுத்து இயக்கம் இன்று நடத்தப்பட்டது. மேலும், இதன் ஒரு பகுதியாக உடல் பரிசோதனைக்கான புதிய திட்டம் ரூபாய் 999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கையெழுத்து இயக்கத்தை கேஎம்சிஎச் இயக்குநர் டாக்டர் அருன் பழனிசாமியுடன் இணைந்து கோவை நகர போக்குவரத்து இணை ஆணையர் எஸ்.சரவணன் இந்த கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

இதய நோய்களுக்குப் பிறகு புற்றுநோயே மனிதர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. உலக அளவில் புற்றுநோயால் தாக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் போல இந்தியாவிலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்தியாவில் வருடத்திற்கு 18 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோயால் பதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அடுத்து வரும் 5 முதல் 10 வருடங்களில் இரட்டிப்பாகும் என கருதப்படுகிறது.

புற்றுறோயை கண்டறிவது, அதற்கு சிகிச்சை அளிப்பது ஆகிய துறைகள் மிகவும் வளர்ச்சியடைந்து விட்டது. தற்போதைய காலகட்டத்தில் 50 சதவிகித புற்றுநோயாளிகள் குணமடைகிறார்கள். இது 1970-களில் 25 சதவிகிதமாக இருந்தது.

புற்றுநோயை குணப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இந்நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அனைத்துவிதமான புற்றுநோய்களும் ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் குணமடைய வாய்ப்புள்ளது.

புற்றுநோயின் சிகிச்சையானது அறுவை சிகிச்சை, ரேடியோ தெரபி, கீமோ தெரபி உள்ளிட்ட மூன்றுவிதமாக சிகிச்சைகளை உள்ளடக்கியது. இவ்வனைத்துவிதமான சிகிச்சைகளும் இன்று மிகவும் முன்னேறியுள்ளது. இதனால், புற்றுநோயை மிகவும் துள்ளியமாகவும், பாதுகாப்பான முறையிலும் குணமாக்க முடியும்.

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...