கோவையில் இரவு பகலாக ரோந்து மற்றும் வாகன சோதனையில் போலீசார்..!

சுந்தராபுரம், போத்தனூர் சந்திப்பு, ஆத்துப்பாலம், உக்கடம், டவுன்ஹால், புல்லுக்காடு, ரயில் நிலையம், சுங்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் காவல் ஆய்வாளர் தலைமையில் தலா 30 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொண்ட புலன் விசாரணையில் கோவையில் சதி திட்டம் அரங்கேற்ற திட்டமிட்டதும், இறந்த முபின் வீட்டில் கிலோ கணக்கில் வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ள நிலையில், நேற்று இரவு இறந்த முபினின் உறவினரான அஃப்சர் கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு குறித்தான ஆலோசனைக் கூட்டத்தில், கோவையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், புதிய காவல் நிலையங்கள் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது போன்றவற்றை குறித்து ஆலோசிக்கப்பட்டது.



அதனடிப்படையில், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகள் போலீஸ்காரன் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 



குறிப்பாக சுந்தராபுரம், போத்தனூர் சந்திப்பு, ஆத்துப்பாலம், உக்கடம், டவுன்ஹால், புல்லுக்காடு, ரயில் நிலையம், சுங்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த சோதனைச் சாவடிகளில் இரவு, பகலாக காவல் ஆய்வாளர் தலைமையில் தலா 30 காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 



மாநகர பகுதிக்கு வரும் அனைத்து இரு சக்கர, கார், சரக்கு வாகனங்கள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், உக்கடம் பகுதியில் சிறப்பு அதிரடிப்படை (RAF) வீரர்களும், கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...