அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக பிரதிபலிக்கும் என்று கோவையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு உற்சாகமாக நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர், பல கருத்துக்கணிப்புகளும் NDA-வின் முன்னிலை குறித்து ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்தார். திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக பிரதிபலிக்கும் என்றும், மாற்றத்திற்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

mAnypN3mfQkYmS3PH6cdnFvV1ptg4bFVR49OnHT0.jpg

தமிழகத்தில் ‘டபுள் இன்ஜின்’ அரசு அமைந்தால் மாநில வளர்ச்சிக்கு புதிய திசை கிடைக்கும் எனவும், மக்களின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும் எனவும் தெரிவித்தார். மேலும், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் எதிர்பார்ப்புகளை மீறி பாஜக வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்த அவர், தமிழக அரசியலிலும் பெரிய மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத் துறை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஊழல் சம்பவங்கள் விசாரணைகள் மூலம் வெளிச்சத்துக்கு வரும்; சட்டம் தனது கடமையைச் செய்யும்” என்றார்.

அதேபோல், அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “நிச்சயம் வழங்கப்படும்” என உறுதியான பதில் அளித்தார்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...