கோவை பச்சாபாளையத்தில் சிறுதுளி சார்பில் சாந்தி பனை வனம் மற்றும் பனையகம் துவங்கும் நிகழ்வு நடைபெற்றது

கோவை பச்சாபாளையத்தில் பனை மரத்தின் நற்பண்புகளைப் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறுதுளி சார்பில் நடைபெற்ற பனையகம் துவங்கும் நிகழ்வில் செட்டிபாளையம் ஊராட்சித் தலைவருக்கு ”துளி பசுமை விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.


கோவை: பனை மரம் சங்க காலத்திலிருந்தே நமது பண்பாட்டின் ஒரு அங்கமாகவும், தமிழ்நாட்டின் மாநில மரமாகவும் உள்ளது. இந்த மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயனுள்ளது. இப்பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தையும் அமைதியையும் தருகிறது. பனை மரத்தின் நற்பண்புகளைப் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறுதுளி அமைப்பு சார்பில் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில், லட்சுமிபுரம் பச்சபாளையத்தில் 'சாந்தி பனை வனம்' மற்றும் 'பனையகம்' ஆகியவற்றை உருவாக்கும் முயற்சியை சிறுதுளி முன்னெடுத்துள்ளது.

1.7 ஏக்கர் நிலத்தில், அழகிய நடைபாதையால் சூழப்பட்ட ஒரு பகுதியில் 185 பனை மரங்கள் நடப்பட்டன. மீதமுள்ள ஒரு ஏக்கரில் மியாவாக்கி பாணியில் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

சாந்தி பனை வனத்தில் பனை மற்றும் பனை உற்பத்திகளின் சிறப்பையும் பனை சாகுபடியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள "பனையகம்" என்ற வள மையம் மற்றும் மாநாட்டு மண்டபம் உள்ளது.

இந்த மையத்தில் பனை பற்றிய விவரங்கள், பனையின் பயன்கள், பனை பயிரிடுதல் மற்றும் வளர்ப்பதற்கான வழிகள் மற்றும் பனை சார்ந்த பொருட்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தகவல் மையத்தை விவசாயிகள் பட்டறைகளை நடத்தவும்,

மேலும் பனை வளர்ப்பு மற்றும் அவர்களின் தயாரிப்புகளை மேம்படுத்தவும் இடத்தைப் பயன்படுத்தலாம். பனை பொருட்களை மட்டுமே பயன்படுத்தி அழகிய வள மைய கட்டிடத்தை உருவாக்கிய கட்டிட கலைஞர்களான திரு.சிபி மற்றும் திருமதி உதயா ஆகியோரை சிறுதுளி குழுவினர் பாராட்டினர்.

இந்த “பனையகம்” கலாநிதி பி கே கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்களால் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூர் செட்டிபாளையம் மக்கள் சார்பில் பிரசாத், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள் சார்பில் ஏ.வி.வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்த விழாவில் ஊராட்சி பங்குதாரர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், சிறுதுளி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பேரூர் செட்டிபாளையம் ஊராட்சித் தலைவரும், பசுமைப் பஞ்சாயத்தின் தீவிர ஆர்வலருமான என்.பி. சாந்தி பிரசாத், தனது பஞ்சாயத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதற்கான இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டதை சிறப்பிக்கும் விதமாக “சிறுதுளி பசுமை விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீமதி வனிதா மோகன் கூறுகையில், பனையைப் பற்றி அறிந்து கொள்வதில் பொதுமக்கள் காட்டும் அன்பும் ஆர்வமும் அளப்பரியதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.

இந்நிகழ்ச்சியில் தன்னார்வத் தொண்டு செய்து மரக்கன்றுகளை நடுவதற்கு உதவிய அண்ணா பல்கலைக்கழக பசுமைப் போராளிகளுக்கும், கோயம்புத்தூர் குடியிருப்போர் சங்கம் (RAAC) மற்றும் நிதியுதவி அளித்த சாந்தி கியர்ஸ் மற்றும் எக்ஸ்பிலியோ சொல்யூஷன்ஸ் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சி நிறைவு பெற்றது. தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...