கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவையில் நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் "பதட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பந்த அறிவித்துள்ள அரசியல் கட்சிகள் (பா.ஜ.க) மறுபரீசிலனை செய்ய வேண்டும்” எம்பி நடராஜன் தெரிவித்தார்.


கோவை: அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுக அலுவலகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், எம்பி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-



காவல் துறையின் நடவடிக்கையை இந்த கூட்டம் வரவேற்கிறது.கோவையில் கார் வெடித்த சம்பவத்தில் இறந்தவர் NIA கட்டுப்பாட்டில் இருந்தார் என சொல்கிறீர்கள். அப்படியென்றால் இதை NIA தோல்வி என சம்பந்தபட்டவர்கள் சொல்வார்களா? ஆகவே NIA விசாரணையை இந்த கூட்டம் வரவேற்கின்றது.

கோவை மாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்துவதும் கோவை மாவட்ட மக்கள் மத்தியில் ஒரு பாதுகாப்பான தன்மையை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் இந்த கூட்டம் வரவேற்கிறது.

இந்நேரத்தில் கோவை மாநகரில் பதட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வரும் 31ஆம் தேதி பந்த அறிவித்துள்ள அரசியல் கட்சிகள் (பா.ஜ.க ) மறுபரீசிலனை செய்ய வேண்டும். போராட்டத்தை திரும்ப பெற்று அமைதியை நிலை நாட்ட வேண்டும் மத பதட்டத்தை தூண்டும் விதமான போராட்டம் கூடாது அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...