கோவையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதன் ஒரு பகுதியாக பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்ட பிரச்சார வாகனத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு நிகழ்வாக மத்திய - மாநில அரசுகளால் அமல்படுத்தப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட பிரச்சார வாகன தொடக்க விழாவும் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு, பயிர் காப்பீட்டு திட்ட பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் பயன்கள் குறித்தான துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைத்தீர் கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், வேளாண்மை இணை இயக்குனர் சபி அகமது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...