கோவையில் இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞரை 2 கி.மீ தூரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்த பயிற்சி உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

உக்கடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பயிற்சி உதவி ஆய்வாளர் அருண்குமார், சந்தேகத்துக்கிடமாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்திய போது தப்பிச்சென்ற அந்த நபரை 2 கி.மீ துரத்தி சென்று பிடித்து விசாரித்ததில் அவர் ஒரு இளைஞரை தாக்கி விட்டு வாகனத்தை திருடி வந்தது தெரிய வந்தது.


கோவை: திண்டுக்கல்லில் பயிற்சி உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் அருண்குமார். இவர் தற்போது, கோவைக்கு பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார்.

இந்த நிலையில் உதவி-ஆய்வாளர் அருண்குமார் நேற்று இரவு உக்கடம் போலீசாருடன் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தார். அப்போது 2 இளைஞர்கள் வெவ்வேறு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை பார்த்த எஸ்.ஐ அருண்குமார் தடுத்து நிறுத்தி மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை காண்பிக்கும்படி கூறினார்.

இதனால் அந்த இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் இருவரில் ஒருவர் தனியாக சென்று மாயமானார். இதனை பார்த்த மற்றொரு இளைஞரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உதவி ஆய்வாளர் அருண்குமார் அந்த இளைஞரை துரத்தி சென்றார்.

2 கிலோ மீட்டர் தூரம் விடாமல் இளைஞரை துரத்திச் சென்று மடக்கி பிடித்தார். பின்னர் உடனே அவர் அந்த இரு சக்கர வாகன எண்ணை வைத்து விசாரித்த போது, அந்த இரு சக்கர வாகனம் போத்தனூரை சேர்ந்த நபருடையது என்பதும் அவரை தாக்கி விட்டு 3 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் அருண்குமார் மடக்கி பிடித்த இளைஞரை உக்கடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.



விசாரணையில் அந்த வாலிபர் காளப்பட்டியை சேர்ந்த ரத்திஷ் (20) என்பது தெரியவந்தது.

பின்னர், போத்தனூரில் இருந்து வாகனத்தை திருடி வந்ததால் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உக்கடம் வந்து அந்த இளைஞரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



இரு சக்கர வாகனத்தை திருடி வந்த வாலிபரை 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி பிடித்த பயிற்சி உதவி ஆய்வாளர் அருண்குமாரை பொதுமக்கள், அதிகாரிகள் பாராட்டினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...