சுகாதார துறையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலகங்களுக்கு கேடயங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டு

சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவில், சுகாதார துறையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய 44 அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற 17 பேருக்கு கேடயங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கி பாராட்டினார்.


கோவை: சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா இன்று கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சாரதாம்பாள் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், சுகாதார துறையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய 44 அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற 17 பேருக்கு கேடயங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கி பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், கொரோனா பேரிடர் காலத்தில் பிற நாடுகளை விட நம் நாட்டின் பொது சுகாதாரத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டது. அதற்கு ஓய்வின்றி பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் அனைவரும் முக்கிய காரணம்.

மேலும், ஒரு மருத்துவராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக, தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறையில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் தொடர்பாக குறு நாடகங்கள் கலை நிகழ்ச்சிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...