கோவை சி.எஸ்.ஐ கல்வி நிறுவங்களின் புதிய கல்விக்குழு கன்வீனர் தேர்வு


சி.எஸ்.ஐ. கோவை திருமண்டலத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகள், பட்டையைப் படிப்பு கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், பள்ளிகள் என இருநூற்றுக்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை நிறுவகிப்பதற்கான கூட்டுக் குழு கன்வீனர் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும். அதன்படி கடந்த 29,30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சி.எஸ்.ஐ. திருமண்டலப் பேரவைத் தேர்தலில் கல்விக்குழு கன்வீனராக டாக்டர். ஏ.சந்திரன் தேர்வு செயப்பட்டார். 

கோவை பந்தைய சாலையில் உள்ள சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு பேராயர் திமோத்தி ரவீந்தர், செயலாளர் பால்செல்வின் பிரபுதாஸ் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துக் கூறினார். பதவி ஏற்றுக் கொண்ட பின்பு, செய்தி வெளியிட்டுள்ள கன்வீனர் டாக்டர் ஏ.சந்திரன் தற்போது கல்விக்கும் வேலை வாய்ப்பிற்கும் இடையில் நிறைய இடைவெளி உள்ளது. கல்வி முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் நிறைய சிரமங்கள் உள்ளது. வரும் 2020ம் ஆண்டில் படித்து வெளியில் வரும் மாணவர்களில் 27 சதம் பேர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கு என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. எனவே, சி.எஸ்.ஐ. கல்வி நிறுவங்களில் மாணவர்களுக்கு கல்வியுடன், வேலை வாய்ப்பை பெறுவதற்கான தகுதி பயிற்சியும், மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...