டாஸ்மாக் பாரில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள் கைது - 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கோவை அறிவொளி நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுப்பிரியர்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை அறிவொளி நகர் பகுதியில் டாஸ்மாக் கடையுடனான பார் இயங்கி வருகிறது. இந்த பாருக்கு நேற்றைய தினம் 2 மதுப்பிரியர்கள் வந்து மது அருந்தியுள்ளனர்.

இதனையடுத்து, மதுப்பிரியர்கள் இருவரும் பாரில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதில், பார் ஊழியர்களுக்கும் மதுப்பிரியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள் பாரில் இருந்த சேர் மற்றும் டேபிள்களை தரையில் போட்டு உடைத்துள்ளனர். மேலும் காலி பாட்டில்களை பார் ஊழியர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் போலீசார், ரகளையில் ஈடுபட்ட மதுப்பிரியர்களான அஜித் மற்றும் தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதனைதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதையில், மேஜை மீது காலை போட்டதால் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும், அவர்கள் மீது, காயம் ஏற்படுத்தல், மிரட்டல் விடுத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மதுப்பிரியர்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...