வால்பாறை வார்டு எண் 4 பகுதியில் நகர மன்ற தலைவர் முன்னிலையில் இன்று கிராம சபா கூட்டம் நடைபெற்றது

கோவை வால்பாறையில் வார்டு எண் 4 ஸ்டேன்மோர் ஆத்து மட்டம் பகுதியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுகள் அளித்தனர்.


கோவை: தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. கிராம சபை கூட்டமானது உள்ளாட்சி தினமான நவம்பர் மாதம் 1-ந் தேதி நடைபெறும்.



இந்த கிராம சபை கூட்டத்தின் நோக்கமானது கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவது என மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் நடப்பதாகும்.



இன்று கோவை வால்பாறையில் 4 வது வார்டு பகுதியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இக்கோட்டத்தில் வார்டு உறுப்பினர் ஜே பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி நகராட்சி ஆணையாளர் பாலு மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் நகராட்சி மேலாளர் சலாவுதீன் ஆகியோர்களின் முன்னிலையில் ஸ்டேன்மோர் ஆத்து மட்டம் பகுதியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 4 வது வார்டுக்கு உட்பட்ட ஸ்டேண்மோர் ஆத்துமட்டம் ஆகிய பகுதியிலிருந்து மக்கள் கலந்து கொண்டனர்.



பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள பிரச்சனைகளை மனுக்களாக எழுதி வார்டு உறுப்பினர் ஜே பாஸ்கர் அவர்களிடமும் நகராட்சி ஆணையாளர்களிடமும் நகர மன்ற தலைவர் அவர்களிடமும் கோரிக்கை மனுவை வழங்கினார்.

இந்த கோரிக்கை மனுவிற்கு உடனடியாக நகர மன்ற கூட்டத்தில் விசாரணை செய்து உடனடியாக தீர்வு காணப்படும் என்று நகர மன்ற தலைவர் தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...