கோவை கூட்ஸ்செட் சாலையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு சுவர் ஓவியம்!


சேலம் டிவிசன் தெற்கு ரயில்வே துறை மற்றும் அறம் பவுண்டேஷன் சார்பில் கோவை கூட்ஸ்செட் சாலையில் உள்ள சுவர்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மாணவர்களால் சுவர் ஓவியம் வரையப்பட்டது. 



இதனை சுமார் 225க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இணைந்து ரயில்வே சம்பந்தமான ஓவியங்கள், இயற்கை ஓவியம், உடல் உறுப்பு தானம் குறித்த ஓவியம், மனித உரிமை மற்றும் குழந்தைகளுக்கான கார்டூன் ஓவியம் போன்றவற்றை வரைந்தனர். இதற்கான பெயிண்டிங் மற்றும் இதர தேவைகளை சென்னீஸ் நிறுவனம் வழங்கியது. 

 



இதனை கோவை மாநகர போக்குவரத்துறை துணை ஆணையர் சரவணன் பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் மாணவர்கள் சுவர் ஓவியம் வரைவதற்கு சாலை ஓரங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைத்தும் பாதுகாப்பு வழங்கினார். இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவதையும் ஊக்குவித்தும் மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் அவர் தெரிவித்தார். இதனை கோவை அறம் பவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட்டின் அறங்காவலர், லதா சுந்தரம் ஒருங்கிணைத்தார்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...