அண்ணாமலை கைதை கண்டித்து கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் - பாஜக-வை சேர்ந்த 257 பேர் மீது வழக்குப்பதிவு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை சித்தாபுதூர் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி உட்பட 257 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.



கோவை: திமுக அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை சித்தாபுதூர் சாலையில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்டூர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இந்நிலையில் அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பாஜக-வை சேர்ந்த 257 பேர் மீது IPC 143,மற்றும் 341 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...