'பாரம்பரிய மாட்டு இனங்களை காப்பது நமது கடமை', கோவை கல்லூரி நிகழ்ச்சியில் கார்த்திகேய சிவசேனாபதி பேச்சு .


கோவை, தடாகம் சாலையில் உள்ள கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், கோவை ரோட்ராக்ட் கிளப்  சார்பில் "தமிழ்நாட்டின் கால்நடை மற்றும் உயிரி பன்முகத்தன்மை கலாச்சார விளையாட்டு" என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய பல்லுயிர் பாதுகாப்பு குழுமத்தில் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார்.



இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 'இந்தியாவில் முன்பு இருந்த மாட்டு இனங்கள் இன்று அழிந்து வரும் சூழ்நிலை நிலவி வருகிறது. வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களிலும் இன்ற பரவலாக இருக்ககூடிய மாட்டு இனம் 'ஜெர்சி'. ஜெர்சி இன மாடுகள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் வரவழைக்கப்பட்டு இனபெருக்கத்தின் மூலம் இன்று அதிகம் இந்தியாவில் பரவியுள்ளது. இவை அதிகம் பால் கொடுக்கும் தன்மை கொண்டவை. மேலும், 1945ம் ஆண்டு இரண்டாம் உலக போர் முடிந்த நிலையில் தற்பொழுது ரசாயனம் மூலமாகவும், பீட்டா போன்ற பன்னாட்டு அமைப்புகள் மூலமாகவும் அந்நிய பொருட்கள் இந்தியாவில் பெரும் இடத்தை பிடித்துள்ளது, இதுவே நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அழிவிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

கடந்த மாதம் ஜல்லிக்கட்டிற்காக தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் புரட்சி மூலமாக இன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழ்நாட்டில் மீண்டும் களம் கண்டுள்ளது. இறுதி கட்ட போராட்டத்தில் நுழைந்த சில சமூக விரோதிகளால் தான் போராட்டம் திசை மாறியது. ஜல்லிக்கட்டு விளையாட்டு நிரந்திரமாக தமிழகத்தில் நடை பெற முக்கிய காரணம் மாணவர்கள் தான். இந்தியாவில் மற்றும் தமிழநாட்டில் உள்ள நாட்டு மாட்டு இனங்களை பாதுகாப்பதும் நமது முக்கிய கடமை. அவ்வாறு பாதுகாத்தால் தான், நமக்கு பின்னால் வரும் சந்ததியினருக்கு நம் பாரம்பரிய கால்நடைகளை கொண்டு சேர்க்க முடியும்', என்றார்.   



Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...