விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அரசு சார்பில் நேரில் சென்று மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


Coimbatore: கோவை: கோவை மாவட்டம், கோவை வடக்கு வட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் கிராமம், ஸ்ரீ பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சங்கீத் (19), தந்தை ராஜ்குமார் என்பவரின் மகன். இவர் எஸ்.என்.எஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.



கடந்த 15.05.2026 அன்று இரவு 11.30 மணியளவில் குருடம்பாளையம் கிராமம், தொப்பம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளார். படுகாயமடைந்த அவர் உடனடியாக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சங்கீத் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று மாலை அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, சங்கீதின் குடும்பத்தினர் மனிதநேய அடிப்படையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அரசு சார்பில் நேரில் சென்று மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...