கோவை வேளாண்‌ பல்கலை.-யில்‌ வரும் நவ.7ஆம் தேதி தேனீ வளர்ப்பு குறித்த ஒருநாள்‌ பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை சார்பில், வரும் நவம்பர் 7ஆம் தேதி தேனீ வளர்ப்பு தொடர்பான ஒருநாள் தொழில்நுட்ப பயிற்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வரும் 7ஆம் தேதி தேனீ வளர்ப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில், பூச்சியியல்‌ துறை சார்பில் ஒவ்வொரு மாதமும்‌ தேனீ‌ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள்‌ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நவம்பர் மாதத்திற்கான பயிற்சி தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

வரும் திங்கள்கிழமை (07.11.2022) அன்று கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வரும் 7ஆம் தேதி தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. .

இந்த பயிற்சியின்‌ முக்கிய அம்சங்கள், ‌

1) தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல்‌

2) பெட்டிகளில்‌ தேனீ வளர்க்கும்‌ முறை மற்றும்‌ நிர்வாகம்‌

3) தேனீக்கு உணவு தரும்‌ பயிர்கள்‌ மற்றும்‌ மகரந்த சேர்க்கை மூலம்‌ மகசூல்‌ அதிகரிக்கும்‌ பயிர்களின்‌ விவரம்‌

4) தேனைப்‌ பிரித்தெடுத்தல்‌

5) தேனீக்களின்‌ இயற்கை எதிரிகள்‌ மற்றும்‌ நோய்‌ நிர்வாகம்‌

இந்த பயிற்சியில்‌ கலந்துகொள்ள விரும்புவோர்‌, பயிற்சி நாளன்று காலை 9.00 மணிக்கு பூச்சியியல்‌ துறை, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திற்கு வந்து அடையாள சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் அப்போதே, பயிற்சிக்‌ கட்டணம்‌ ரூ.590/- (ரூபாய்‌ ஐநூற்று தொண்ணூறு மட்டும்‌) நேரடியாக செலுத்த வேண்டும்‌.

காலை 9.00 முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியின்‌ இறுதியில்‌ சான்றிதழ்‌கள் வழங்கப்படும்‌.

அணுக வேண்டிய முகவரி:

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, வேளாண்‌ பூச்சியியல்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்‌ கழகம்‌,

கோயம்புத்தூர்‌

மேலும்‌ விவரங்களை அறிந்து கொள்ள, 0422-6611214 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...