கோவை சிங்காநல்லூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் தீப்பிடித்ததால் பரபரப்பு...!

சிங்காநல்லூர் அருகே கார் வந்த போது திடீரென்று காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. பின்னர், மளமளவென தீ பிடித்து எரியத் துவங்கியது. சூலூர் தீயணைப்பு துறையினர், உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சொக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இன்று இரவு இவர் தனது காரில் கோவையை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

அப்போது கோவை, சிங்காநல்லூர் அருகே வந்த போது திடீரென்று காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்த அவர், உடனே காரை நிறுத்தியுள்ளார். பின்னர், காரின் முன்பகுதியில் மளமளவென தீ பிடித்து எரியத் துவங்கியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சூலூர் தீயணைப்பு துறையினர், உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில், காரின் சில பகுதிகள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...